Sunday, 9 December 2012

உங்களுக்கு நோமோஃபோபியா இருக்கா? படிச்சு பாருங்களேன்...


நோமோஃபோபியா அப்படியெனில் என்னவென்று யோசிக்குறீர்களா? அது வேறொன்றும் இல்லை. இது ஒரு வகையான பய வியாதி தான். சாதாரணமாக ஃபோபியா என்றால் காரணமின்றி தேவையில்லாமல் மனதில் எழும் ஒருவித பயம் என்று அர்த்தம். அந்த ஃபோபியாவில் நிறைய வகைகள் உள்ளன. அவை பூச்சிகளைப் பார்த்து பயப்படுவது, பொது இடங்களில் பேச பயப்படுவது என்பன. அவற்றில் ஒன்றான நோமோஃபோபியா என்றால் தற்போது அனைவரிடமும் இருக்கும் மொபைலை எங்கேனும் தவறிவிட்டாலோ அல்லது மறந்து வீட்டில் வைத்து விட்டு, பின் அதனை நினைத்து வருத்தப்படுவது தான் நோமோஃபோபியா. கடந்த பல வருடங்களாக இந்த வியாதியானது பலரிடம் அதிகம் காணப்படுகிறது.
nomophobia signs you have it
ஏனெனில் தற்போது நமது டெக்னாலஜி அதிகம் வளர்ந்துவிட்டது. அதனால் அவற்றை மக்கள் தெரிந்து கொள்ள அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். பின் அவை மிகவும் பிடித்து, அவற்றின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் அவை இல்லாமல் எந்த ஒரு காரியமும் செய்ய முடியாத நிலையில் உணர்கின்றனர். ஆகவே இந்த மொபைலைப் பற்றி மேற்கொண்ட ஒரு ஆய்வில், தங்களிடம் வைத்திருக்கும் மொபைல் போனில் 66 சதவீத மக்கள், இந்த நோமோஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சரி, உங்களுக்கும் நோமோஃபோபியா இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோமோஃபோபியாவின் அறிகுறிகள்...
* இரவில் படுக்கும் போது மொபைலை தொலைத்துவிடுவது போல் கனவுகள் வந்து, அதனால் மனம் பதறி உடனே எழுந்து மொபைல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, பின்னர் தூங்கினால், இந்த நோய் உள்ளது என்பதை அறியலாம்.
* தூங்கும் போது மொபைலை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவது. அவ்வாறு ஒரு நாள் கூட தவறாமல், அந்த மொபைலை படுக்க போகும் போது கையில் எடுத்துக் கொண்டு, தலையணைக்கடியில் வைத்துக் கொண்டோ அல்லது அருகில் வைத்துக் கொண்டோ தூங்கும் பழக்கம் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இல்லையெனில் இந்த நோயால் பைத்தியம் கூட பிடிக்க நேரிடும்.
* செல்போனானது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு, பின் அது ஏதோ ஒரு பேப்பரின் அடியில் இருக்க, ஆனால் அது நமது கண்களுக்கு தெரியாமல் இருந்து, தொலைந்துவிட்டது என்று மனம் முடிவு செய்துவிட்டால், அப்போது உடனே முகம், உடல் முழுவதும் வியர்க்க ஆரம்பிக்கும். மேலும் மனம் சிறிது அப்செட்டில் இருக்கும். இப்படியிருந்தால், அது இந்நோய்க்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* குளிக்கும் போது கூட மொபைலை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றால், இதுவும் நோமோஃபோபியாவிற்கு ஒருவித அறிகுறி.
* சிலர் ஒன்றுக்கு இரண்டு மொபைல் போன்கள் வைத்திருப்பார்கள். ஏனெனில் ஒரு மொபைலில் சார்ஜ் அல்லது தொலைந்துவிட்டாலோ, மற்றொன்றை பயன்படுத்தலாம் என்று முன்பே யோசித்து, அவர்களுடனே வைத்திருப்பார்கள். இத்தகைய அறிவு இந்த நோய் இருப்பவர்களுக்குத் தான் அதிகம் இருக்கும்.
* சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மொபைலில் சார்ஜ் குறைந்தால், நன்கு பேசிக் கொண்டிருப்பவர்களின் மனநிலையிலும் சார்ஜ் குறையும். பின்னர் மொபைலுக்கு சார்ஜ் போட்டால் தான், இவர்களது மனமும் சற்று பிரகாசிக்கும்.
மேற்கூறியவற்றில் நான்கு அறிகுறிகள் இருந்தாலும், இந்த நோய் உங்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

சாம்சங் கேலக்ஸி S4: இந்த குறைந்தவிலை டேப்லட் 2013ல் வருகிறது



சாம்சங் ரசிகர்கள் கேலக்ஸி S3யை வாங்குவதிலோ, நோட் 2வை வாங்குவதிலோ முனைப்புடன் இருக்கும் நிலையில் அவர்களுக்காக மற்றுமொரு புதிய தகவல் இங்கே.
அதானது, சாம்சங் கேலக்ஸி S3யின் பிரமாண்ட விற்பனையை தொடர்ந்து, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S4யை வெளியிடபோவதாக பல வதந்திகள் வெளியானவண்ணம் உள்ளன. இந்நிலையில், இன்று சாம்மொபைல் என்ற தளம் கேலக்ஸி S4யை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. கேலக்ஸி S4, 2013ல் வெளியாகுமென்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டபட்டுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 2வும் வெளியாகுமென கூறப்படுகிறது.
அறிக்கையின் முழு விவரங்களும் இங்கே:
சாம்சங் கேலக்ஸி S4: அந்த அறிகயின்படி கேலக்ஸி S4, வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகுமென்றும் இதற்கு “ப்ராஜெக்ட் A” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய வதந்திகளைப் பொறுத்தவரையில் இந்த கேலக்ஸி S4ல் HD AMOLED திரை,குவாட்கோர் CPU, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்குதளம், 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் திரையின் அளவு 5 இருக்கலாம்.
கேலக்ஸி நோட் 2: அதே சமயம் சாம்சங் நிறுவனம் விலைகுறைந்த கேலக்ஸி நோட் 2வை வெளியிடலாம். இந்த புதிய கேலக்ஸி நோட் 2வுக்கு இது உரிய பெயர் அல்ல. இருந்தாலும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 2வின் நுட்பக்கூறுகளை குறைத்து ஐரோப்பாவில் வெளியிடுமென தெரிகிறது. இந்த புதிய சாதனம் அழகான வடிவமைப்புடன் இல்லாமலோ அல்லது AMOLED தொழில்நுட்பம் இல்லாமலோ இருக்கலாம்.
புதிய சாம்சங் டேப்லட்: இந்த புதிய சாம்சங் டேப்லட் கண்டிப்பாக ஆசஸ் ட்ரான்ஸ்பர்மருக்கு போட்டியாக இருக்கு. இந்த டேப்லடை 13″ அளவிலும் QWERTY டாக் என்ற தொழில்நுட்பத்திலும் வெளியிட சாம்சங் விரும்புகிறது. இதில் குரோம் ஒஸ் இருக்குமா அல்லது ஆன்ட்ராய்டு இயங்குதளமிருக்கா என்பது குறிப்பிடப்படவில்லை.

ஆன்ட்ராய்டு பற்றி தெரிந்ததும் தெரியாததும்


ஐஓஎஸ்-க்கு போட்டியாக மொபைல் போன்களுக்காக பிரத்தியோகமாக 2003ல் உருவாக்கப்பட்டதே ஆன்ட்ராய்டு இயங்குதளம். முதன்முதலில் Android, Inc என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் கூகுள் நிறுவனத்தால் 2005ல் விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் ஒஹெச்எ (OHA – Open Handset Alliance) என்ற நிறுவனத்தில் பதிவு செயததன் மூலம் ஓபன்சோர்ஸ் அந்தஸ்து பெற்றது.
androidஆன்ட்ராய்டு இயங்குதளம் முழுவதும் சி, சி++ மற்றும் ஜாவா கோடிங்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் சான்ட்பாக்ஸ் எனும் தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் மிகவும் பாதுகாப்பானது. மற்றும் இந்த வகை அப்ளிகேசன்களில் ப்ரைவசியும் அதிகம்.
கூகுள் தயாரிப்புகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் ஆன்ட்ராய்டு பயன்படுத்தும் மொபைல் போன்கள் ஐபோன்களுக்கு மாற்றாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மிகவும் பிரபலமடைந்துள்ளது.
முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளமானது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலங்களில் இது, லேப்டாப்கள், நெட்புக்கள் (Netbooks), ஸ்மார்ட்புக்ஸ் (Smartbooks) மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் வெர்சன்கள்:

  • முதலில் ஆன்ட்ராய்டு இயங்குதளம் செப்டம்பர் 2008ல் வெளியிடப்பட்டது.
  •  கப்கேக் (v1.5),
  • டூனுட் (v1.6),
  • எக்லைர் (v2.0) 2009ல் வெளியிடப்பட்டது.
  • ப்ரோயோ (v.2.3),
  • ஜிங்கர்பிரட் (v2.4) 2010ல் வெளிவந்தது.
  • ஹனிகாம்ப் (v3.0) 2011 மே மாதத்தில் வெளியிடப்பட்டது.
  • ஐஸ்கிரீம் சாண்ட்விட்ச் – ஆனது அக்டோபர் 2011ல் வெளிவந்தது.
  • ஜெல்லிபீன் (V4.1.x) ஜூலை 9, 2012லும்,
  • ஜெல்லிபீன் (V4.2) நவம்பர் 13, 2012லும் வெளியிடப்பட்டது.
என்னதான் ஆன்ட்ராய்டு இயங்குதளம் உலகப்புகழ் பெற்றதாக இருந்தாலும், அப்ளிகேசன் டெவலாபின்பொழுது டிவைஸ் பிராக்மென்டேசன்(Device Fragmentation) என்ற எரர் பிரச்சனை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.

கூகுளுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் சண்டை


எடுத்தவுடன் எந்தமுடிவுக்கும் வந்துவிடாதீர்கள். அதாவது, கூகுள் நெக்சஸ் 10க்கும் ஆப்பிளின் ஐபேட் 4க்குமிடையில் பலத்த போட்டிநிலவுவதாக சமீபத்திய ஆய்வுகளைக்கொண்ட சந்தைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு டேப்லட்களும் ஏறத்தாழ ஒரே நுற்பக்கூறுகள் கொண்டதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டும் ஒரே திரை அளவுகளைக்கொண்டுள்ளது. அதாவது 10″ ஆகும்.

கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளதைக்கொண்ட டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிதுவருவதாகவும் அது எந்த அளவெனில், 2011 கடைசி காலாண்டில் 29.1 சதவிகிதத்திலிருந்து 2012ன் அதே காலகட்டத்தில் இதனளவு 41.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் ஐபேட் டேப்லெட்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்துவருகிறது. முன்னர் 64.5% இருந்த விகிதம் இப்பொழுது 56.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஆன்ட்ராய்டு டேப்லெட்களின் சந்தை மதிப்பு அதிகரித்ததற்கு முக்கியகாரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுவது கூகுளின் நெக்சஸ் 7. ஆனால் ஆப்பிளின் ஐபேடில் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிளின் ஐபேட் 4 மற்றும் ஆன்ட்ராய்டு நெக்சஸ் 10 ஆகியவற்றிற்கான நுட்பக்கூறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எடை மற்றும் அளவுகள்: நெக்சஸ் 10, 263.8 x 177.8 x 8.9 என்ற அளவிலும் 603 கிராம்கள் எடையுடனும், ஐபேட் 4, 241.2 x 185.7 x 9.4 என்ற அளவிலும் 652 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.
திரை: நெக்சஸ் 10, 10.1″ டச்ஸ்க்ரீன் மற்றும் 2560 x 1600 பிக்சல் ரெசுலூசன். ஐபேட் 4, 9.7″ LED டச் திரை மற்றும் IPS தொளில்நுட்பதிலுள்ள 2048 x 1536 பிக்சல் ரெசுலூசன்.
ப்ராசசர்: நெக்சஸ் 10, 1.7GHZ கார்டெக்ஸ் A15 டூயல் கோர் 9 ப்ராசசர். ஐபேட் 4, ஆப்பிள் A6X ப்ராசசர்.
இயங்குதளம்: நெக்சஸ் 10, ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன். ஐபேட் 4, ஆப்பிள் ஐஒஎஸ் 6 பயன்படுத்தப்படுகிறது.
கேமரா: நெக்சஸ் 10 மற்றும் ஐபேட் 4 ஆகிய இரண்டும் 5எம்பி ரியர் கேமரா பயன்படுத்துகிறது.
நினைவகம்: நெக்சஸ் 10, 16ஜிபி/32ஜிபி உள்நினைவகம், 2ஜிபி ரேம் மற்றும் ஐபேட் 4ல் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்நினைவகம், 512எம்பி ரேம் உள்ளது.
இணைப்பான்கள்: மைக்ரோ USB, WiFi, ப்ளுடூத், 3G மற்றும் உள்ளார்ந்த GPS.
பேட்டரி: நெக்சஸ் 10, 9,000mAh பேட்டரியில் 9 மணிநேரம் பேசும்பொழுதும், 500 மணிநேர ஸ்டான்ட்பை வசதியும் உள்ளது.
ஐபேட் 4ல் 10 மணிநேர பேக்கப் வசதியும் உள்ளது.

விலை: ஐபேட் 4 விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் நெக்சஸ் 10 விலை ரூ.32,850 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக எந்த இயங்குதளம் கொண்ட டேப்லெட் வாங்குவதென்பது பயனாலரைப்பொருத்ததென்பதே.

உடையாத திரையுடன் வரப்போகிறதா சாம்சங் கேலக்ஸி S4?


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S4யை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதாகவும் இதன் திரை உடயாததாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட் போன் கேலக்ஸி S4 என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்நிறுவனதிலிருந்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையிலேயே கேலக்ஸி S4 மிகவும் பிரபலமடைந்துள்ளது.

தற்பொழுது தயாரிப்பு நிலையிலுள்ள இந்த அடுத்ததலைமுறை தொழில்நுட்பம்கொண்ட இந்த ஸ்மார்ட் போன் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்படுமென தெரிகிறது.
அதேபோல் சில வதந்திகள் இந்த ஸ்மார்ட் போன் கண்ணாடி மற்றும் பாலிமர் ஆகியவை கொண்ட கலவையால் செய்யப்படும் உடையாத திரையுடன் வெளிவரப்போவதாக கூறுகின்றன.
இதன் சில நுட்பக்கூறுகளாவன,
  • 2 GHZ குவாட் கோர் ப்ராசசெர்
  • 5″ பெரிய திரை,
  • 1080 பிக்செல் ரெசுலூசன்,
  • 13எம்பி கேமரா,
  • 2ஜிபி ரேம்.
விலையைப்பற்றி எந்தத்தகவலும் இல்லை.

ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை சேர்ப்பது எப்படி?


How to add mobile number on Your Facebook in a Easy Way நண்பர்களுடன் சிறப்பாக தகவல்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவதில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சிறப்பாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலை சம்மந்தமாக அதிகம் ஃபேஸ்புக்கில் தகவல்களை பகிர்ந்து கொள்பவர்கள் மொபைல்போன் எண்களை பகிர்ந்து கொள்வது சிறந்த ஒரு வழியாக இருக்கும். இதனால் வேலை
சம்மந்தமாக பல விஷயங்களை பகிர்ந்து கொள்ளபவர்கள், ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பரிமாறி கொள்வது ஒரு வகையில் நல்லது என்று கூறலாம்.
உதாரணத்திற்கு மற்றவர்களுக்கு சிறப்பான ஆலோசனை வழங்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் நிச்சயம், ஃபேஸ்புக்கில் நம்முடன் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு சில வழிகளை நாம் வழங்க வேண்டி இருக்கும்.இதனால் ஃபேஸ்புக்கில் மொபைல் எண்ணை பகிர்ந்து கொள்வதால், நம்மை அனுகி ஆலோசனை கேட்க வேண்டும் என்று
நினைப்பவர்களுக்கு இது ஏதுவாக இருக்கும்.
  • இப்போது ஃபேஸ்புக் பக்கத்தில் எப்படி மொபைல் எண்ணை சேர்ப்பது என்று பார்க்கலாம். இதற்கு முதலில் ப்ரொஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • இதில் எடிட் ப்ரொஃபைல் என்ற ஆப்ஷனையும் பார்க்கலாம். அதில் கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். கான்டேக்டு இன்ஃபர்மேஷன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்த பின், புதிய விண்டோ திறக்கப்படும்.
  • இதில் போன் என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பின் கன்ட்ரி என்ற இடத்தில் நமது நாட்டினை குறிப்பிட்டு மறக்காமல் சேவ் சேன்ஜஸ் என்ற பட்டனை க்ளிக் செய்துவிட வேண்டும்.
  • இல்லையென்றால் மாற்றப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட தகவல்கள் சேவ் செய்யப்படாமல் போய்விடும். இப்படி எளிதாக மொபைல் எண்ணை ஃபேஸ்புக்கில் சேர்க்கலாம்.
  • இப்படி மொபைல் எண்ணை கொடுப்பதினால் வேலை சம்மந்தமான விஷயத்திற்கு உதவுவது மட்டும் அல்லாமல், நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும் சிறப்பாக பயன்படும்.

கேலக்ஸி எஸ்-3யில் ஆன்ட்ராய்டு 4.1 அப்டேஷனை பெற சில வழிகள்!


How to Update Android Jelly Bean Easily on Samsung Galaxy S3
கேலக்ஸி எஸ்-3 வாடிக்கையாளர்களுக்கு குஷிகரமான ஒரு தகவல் காத்திருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் வசதி வழங்கப்பட இருக்கிறது.
நமது நாட்டில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. ஆனால் அதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்பபோன் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்திலும், வெளியீடு செய்யப்பட்ட தருணத்திலும் வாடிக்கையாளர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை தான்.
இப்போது அடுத்த அடுத்து இந்த ஸ்மார்ட்போன் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் மற்றொரு வசதியினை வழங்க தயாராகிறது கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் லேட்டஸ்டு வெர்ஷனான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை வழங்கும்.
இந்த ஜெல்லி பீன் வெர்ஷனில் முக்கியமாக கூறப்பட வேண்டிய விஷயம் இருக்கிறது. இதில் மேம்படுத்தப்பட்ட பிராவுசர் மற்றும் ஃபாஸ்டர் இன்டர்ஃபேஸ் வசதியினை பெறலாம்.
தொழில் நுட்ப வசதியில் சிறப்பாக மேம்பாடுத்தப்பட்ட வசதிகளையும், வேகத்தினையும் பெற இதில் ப்ராஜெக்ட் பட்டர் வசதியினை பெறலாம். செட்டிங்ஸ் மெனு, 2 ஹோம்ஸ்கிரீன் மோட்ஸ், நியூ நோட்டிஃபிக்கேஷன் பார், பாப் அப் ப்ளே ஸ்கிரீன் ஆகிய வசிதகளை இதில் பயன்படுத்தலாம்.
சாம்சங் கீஸ்சை பயன்படு்த்தி இந்த ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எப்படி டவுன்லோட் செய்வதென்று பார்க்கலாம். சாம்சங் கீஸ்சை முதலில் டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை, பிசி கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.
இப்படி இணைத்த பின் ஜெல்லி பீன் அப்கிரேட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதன் பின் ஃபர்ம்வேர் அப்கிரேட் பட்டனை அழுத்த வேண்டும். நிச்சயம் இது போன்ற அப்கிரேட் வசதியினை செய்யும் போது, தகவல்களை பேக்கப் செய்து கொள்ள மறந்துவிடக்கூடாது. இந்த அப்கிரேடு வேலை முடிந்த உடன், இதை ரீஸ்டாட் செய்ய வேண்டும்.
இதன் பின் மீண்டும் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டரில் இருந்து அகற்றிவிட்டு, திரும்பவும் இணைக்க வேண்டும். இது எதற்காக என்றால் தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்வதற்காக.